காஞ்சி: 2 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - வீடியோ

மதுராந்தகம் வன்னியர் பேட்டையில் மாடி மீது கட்டப்பட்டிருந்த இரண்டு குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வன்னியர் பேட்டை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் சுந்தரம் என்பவர்கள் தங்கள் வீட்டில் மாடியில் குடிசை வீடு கட்டி அதில் இரவு நேரத்தில் தங்குவதும், சில வீட்டு உபயோக பொருட்களை அந்த குடிசை வீட்டில் வைத்திருந்தனர். இந்த குடிசை வீடு திடீரென இன்று பிற்பகல் லோகநாதன் என்பவரின் குடிசை முதலில் தீப்பிடிக்கத் துவங்கியது. 

அடுத்து அதன் அருகில் இருந்த சுந்தரம் என்பவரின் வீட்டிலும் தீப்பிடித்தது. உடனே புகை மூட்டம் வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து என்பது மின் கசிவா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்கின்றனர். இந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய மின் உபயோகப் பொருட்கள் அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்தன. இந்த தீவிபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி