உடனடியாக அங்கிருந்த ஆசிரியர் பெருமக்கள் கொடியை மீண்டும் கீழே இறக்கி அதனை சரி செய்து கொண்டிருந்தனர். அதற்கிடையில் கொடி பாட்டும் பாடப்பட்டது. கொடிக்கம்பத்தில் கொடி இருக்கும் நேரத்தில் பாட வேண்டிய கொடி பாட்டு ஆசிரியர்கள் கொடியை சரி செய்து கொண்டிருக்கும் போது பாடப்பட்டது. பின்னர் ஒரு வழியாக கொடியை சரிப்படுத்தி பறக்க விட்டனர். அரசு விழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டிருக்கும்போதும், இவ்வாறு மின்சாரம் இல்லாததும் மற்றும் தேசிய கொடியை தவறுதலாக ஏற்றியதையும் கூட அறியாத மாவட்ட ஆட்சியரின் செயல் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண உடன்பாடு