நிறுவனம், கடந்த ஆக.,16ம் தேதி, அவரை பணியிலிருந்து நீக்கியது. ஒரு மாதமாக, பிற இடங்களில் வேலைக்காக முயற்சித்தும், வேலை கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் (செப்.,30) சொந்த ஊருக்கு சென்று திரும்பியவர், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவதினத்தன்று மேல்தள குளியலறையில் துாக்குப்போட்டு இறந்தார்.
இதுகுறித்து தோழிகள், மாமல்லபுரம் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.