இந்த ஏரியில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக ஜிலேபி மீன்கள் 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை எடை கொண்டவை செத்து மிதக்கின்றன. இரண்டு நாட்களாக மீன்கள் செத்து மிதக்கும் காரணத்தினால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்தச் சாலையில் பயணிப்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். இதனால் தண்ணீரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, உடனடியாக பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுப் பேருந்து மீது விழுந்த பிரமாண்ட ஜனநாயகன் பேனர்