மதுராந்தகம்: நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா

மதுராந்தகம் அருகே பெரும்பேர்கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை தாங்கினார். 

பெரும்பேர்கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி சங்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளி நூற்றாண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், சான்றிதழ், கேடயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி