செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுராந்தகம் பகுதிகளில் அதிமுக சார்பில் "கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்த நன்றி கெட்ட மரகதம் குமரவேல் ஒழிக" என்ற வாசகங்களுடன் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.