தொடர்ந்து, டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்களை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள், ஜி.எஸ்.டி நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் சாலை, இ.சி.ஆர் சாலை, ரேடியல் சாலைகள் மற்றும் பிற சாலைகளில் சுற்றிச் செல்ல பயன்படுத்தப்படும். ஒவ்வொரு வாகனத்திலும் சைரன், ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இரவு சுற்றிச்செல்லவும், நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து மார்ஷல்கள் 8 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிவார்கள். நெரிசல் நேரங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். நெரிசலை சரிசெய்தல், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்தல், சாலைகளில் பழுதடைந்து நிற்கும் வாகனங்களை அகற்ற உதவுதல், பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவை இவர்களின் பணிகளாகும்.