நத்தாநல்லுார், தேவரியம்பாக்கம், அளவூர், வாரணவாசி ஆகிய கடவுப்பாதைகளில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கும், சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு கடப்பதற்கும், தானியங்கி சிக்னல் அமைக்கவும் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் பிரதான கடவுப்பாதைகளை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், தேவரியம்பாக்கம் - -லிங்காபுரம் செல்லும் சாலையோரம், மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிக்கு, தடுப்பு இல்லாததால், வாலாஜாபாத் - வண்டலுார் ஆறுவழிச் சாலையோரம் வாகனங்கள் திரும்பும் போது, வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் கால்வாய் மீது சிமென்ட் சிலாப் மற்றும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.