இந்த தெருவில் எப்போதும், வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில், வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அவ்வழியே செல்லும் ஆட்டோ, கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், தொடர்ந்து வாகனங்கள் நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.