காஞ்சியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, சோகண்டி சுவாதி நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35); மதுரமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி மாலை, ரகுபதி மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுங்குவார்சத்திரம் சென்று விட்டு, சிறிது நேரத்திற்குப் பின் வீட்டிற்குத் திரும்பினர். அந்த நேரத்தில், மர்ம நபர்கள் மூன்று பேர், ரகுபதியின் வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனர். 

இதையடுத்து, வீட்டின் உரிமையாளர்களைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து ரகுபதி, சுங்குவார்சத்திரப் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப் பதிந்து, விசாரணை நடத்திய போலீசார், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஹரிசுதன் (22), திருமழிசை வில்சன் (20), குண்டுமேடு ரமேஷ் (20) ஆகிய மூன்று பேரை நேற்று (ஜூன் 11) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி