ஆனால், அப்பகுதியில் போதிய இடவசதியின்றி அமைக்கப்பட்டதால், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து அரிசி பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளில் இருந்து, பொருட்களை இறக்கி வைத்து பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக, கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல், நியாய விலை கடை பயன்பாடு இல்லாமல், பூட்டியே வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அரசு நிதியில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டடம், பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, இந்த புதிய கட்டடத்தை மாற்று பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்