காரை : ரவுடி குண்டாசில் கைது

காஞ்சிபுரம் அடுத்த, காரைக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 25; இவர் மீது, கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா என, 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை, பொன்னேரிக்கரை போலீசார் கைது செய்து, சிறையில் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ரவிச்சந்திரன் ஈடுபடுவதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சண்முகம், காஞ்சிபுரம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதன்படி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, வேலூர் சிறையில் உள்ள ரவிச்சந்திரனிடம் போலீசார் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி