இவ்வாறு ஓட்டிச் செல்லும் போது, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வரும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு, ஆடு மேய்ப்பவர் அசந்த நேரத்தில், ஆடுகளை திருடிச் செல்கின்றனர். இரவு நேரங்களில், மாடுகளையும் திருடிச் செல்கின்றனர். அவர்கள் வாகனங்களில் செல்வதால், துரத்திப் பிடிக்க முடிவதில்லை. ஆடு, மாடுகள் திருடப்படுவது குறித்து எந்த காவல் நிலையத்திலும் புகார் அளித்தாலும், புகார் பெற்று வழக்கு பதிவு செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக பலர், புகார் அளிக்க காவல் நிலையம் செல்வதில்லை. எனவே, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?