செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க பொதுமக்கள் உள்ளே நுழைந்தபோது தடுக்க முயன்ற காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வயலூர், நெற்குணம் ஆகிய கிராமங்களில் புதிதாக அமையவுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்திருந்த நிலையில் அவர்களை காவலர்கள் வெளியே தடுத்து நிறுத்தியதாகப் புகார். 

காவலர்களைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றபோது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில்கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் வாசல் முன்பு அமர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி