ஏகனாபுரம் நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா விமரிசை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். 

ஸ்ரீபெரும்புதூர் வட்டார கல்வி அலுவலர்கள், ஜெயசங்கர், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.முன்னாள் மாணவர்கள், தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் தடவாளப் பொருட்களை அரசு பள்ளிக்கு வாங்கி கொடுத்தனர். அதேபோல, மாணவ - மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்தனர். மேலும், மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என, கல்வித் துறையினர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி