செங்கல்பட்டில் ஆசிரியர்கள் நூதன முறையில் போராட்டம்

ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கண்களில் சிவப்பு ரிப்பன் கட்டி போராட்டம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத் தேர்வு நடைபெற்றது. 

இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதி கடந்த 12 ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் வெறும் 2768 பேர் மட்டுமே காலி பணியிடங்களை நிரப்புவதாக தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு முழு காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனை ஆணை வழங்கி பின் மறுதேர்வு நடத்த வேண்டும். 

தொடக்கப்பள்ளியில் தற்போது 15000 காலி பணியிடங்களை நியமனத் தேர்வுகளைக் கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் கண்களில் சிவப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி