செங்கல்பட்டில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர் முகாம்

தமிழ்நாடு காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கீழ் செங்கல்பட்டு மாவட்ட சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் உத்தரவின்படி காவல்துறை சமூக நீதி மற்றும் மத நல்லிணக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம், உதவி ஆய்வாளர் அமுதா பழவேலி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தை ஒருங்கிணைத்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினார். 

இதில் பொதுமக்களுக்கு குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், எங்கு தொடக்கூடாது என்றும், பெண்கள் பொது இடத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும், கோயில் திருவிழாக்கள், பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறும்போது தங்களுடைய நகை பொருட்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற இடங்களில் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றச் செயல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார்.

தொடர்புடைய செய்தி