இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் கூறியதாவது: காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவுப்படி, பொது சாலையில், 3,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்ததில் அதிகப்படியான சுமை ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத வாகனங்கள் என, 221 வாகனங்கள் கண்டறியப்பட்டன.
இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறைபிடித்து அபராதம் வசூலித்ததும் மொத்தமாக 23 லட்சத்து 99,510 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில், விதியை மீறி அதிகப்படியாக பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.