செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் சித்தாமூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சூனாம்பேடு பகுதியில் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சித்தாமூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் ரவி ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பனையூர் பி எம் பிரகாஷ் ஆகியோர் வீடு வீடாக சென்று பொதுமக்கள் சந்தித்து மற்றும் வியாபாரிகளிடம் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.