இதற்காக, இந்திரா நகர், திருவான்மியூர் ரயில் நிலையம் அருகில், டைடல் பார்க், சி. எஸ். ஐ. ஆர்., சாலை, பெருங்குடி ஆகிய பகுதிகளில், ஓ. எம். ஆர். குறுக்கே, 2008ம் ஆண்டு நீர்வழி சிறுபாலங்கள் கட்டப்பட்டன. இந்த நீர்வழி பாலங்களில், போதிய பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வெள்ள நீரோட்டத்திற்கு ஏற்ப அகலம் இல்லாததால், கனமழையின்போது ஓ. எம். ஆர்.இல் வெள்ளம் தேங்கி, வாகன போக்குவரத்து தடைபட்டது. இந்த சிறு பாலங்களை மேம்படுத்தவும், கூடுதலாக புதிய நீர்வழி சிறுபாலங்கள் தேவைப்படும் இடங்கள் மற்றும் அதற்காக நிதி ஒதுக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து எடுத்து வருகிறது.
இதற்காக, நேற்று கள ஆய்வு நடந்தது. இதில், நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், தெற்கு வட்டார இணை கமிஷனர் அமித் மற்றும் குடிநீர் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.