செங்கல்பட்டு: உணவு பாதுகாப்புதுறை அதிகாரி திடீர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் மகாராஜா துரித உணவகத்தில் சுகாதாரமற்ற நிலையிலும் தரமாற்றம் கெட்டுப்போன பொருட்களிலும் உணவாக துரித உணவகத்தில் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகாராக சென்றதால் அதன் அடிப்படையில் இன்று (ஏப்ரல் 15) சித்தாமூர் லத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஈஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போழுது அந்த துரித உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி, மீன், சுகாதாரமற்ற நிலையில் இருந்த சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். கெட்டுப்போன மீன், இறைச்சி போன்றவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் இடங்களையும் உடனடியாக சுத்தம் செய்து இரண்டு நாட்களில் உணவக நிர்வாகம் இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், 

அதை பதிலாக அளிக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வில் அபராதம் ரூபாய் 1000 தொகையாக விதிக்கப்பட்டது. மேலும் ஏழு நாட்களுக்குள் உணவக நிர்வாகம் உரிய பதிலை அளிக்கவில்லை என்றால் மாவட்ட அளவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் நோட்டீஸ் வழங்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி