நேற்று இரவு, பாக்கியலட்சுமி தனது பிள்ளைகளை வேறொரு அறையில் பூட்டிவிட்டு, ஞான சித்தனுடன் மது அருந்தியுள்ளார். இதன்போது, இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில், அருகில் இருந்த கடப்பாக் கல்லை எடுத்து, பாக்கியலட்சுமியின் தலையில் பலமுறை அடித்துள்ளார். அதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலைக்குப் பிறகு, ஞான சித்தன் நேராக சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று, தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, பாக்கியலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்