இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லக்கூடிய லாரிகள் அனைத்தும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சிங்கபெருமாள் கோவில் முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகனங்கள் அனைத்தும் வண்டி வரிசையாக அணிவகுத்து ஆமை போல் மெதுவாக செல்கின்றன.