ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் புகழ்பெற்ற அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அதிகாலை ஆட்சீஸ்வரர் சாமிக்கும் இளங்கிளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.