மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில் திருத்தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தேரி நாயணம் என்கிற தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர் சுவாமிக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பான முறையில் பனிரெண்டாவது ஆண்டாக நிகழும் விசுவாச வருடம் வைகாசி மாதம் 15ஆம் தேதி 29.06.2025 முதல் தொடங்கி வைகாசி மாதம் 27-ம் தேதி 10.06.2025 வரை நடைபெறும் பிரமோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

பிரமோற்சவ விழா கடந்த 31.05.2025 அன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக தேனுகாம்பாள், தேனுபுரீஸ்வரர் ராஜ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். 

பின்னர் மாவட்ட ஆட்சியதலைவர் அருண்ராஜ், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா உள்பட திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த தேர் இறுதியில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி