மேலும், அப்பகுதியில் இயங்கி வரும் 10க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகளின் கழிவுகளை, இரவு நேரங்களில் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் துர்நாற்றத்தால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மேலும், குப்பையில் உணவு தேடி வரும் கால்நடைகள், சாலையின் குறுக்கே செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரங்களில் இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.