அகமதாபாத் விமான விபத்து.. காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல் துறை சார்பில் அஞ்சலி

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணிகள், இரண்டு விமானிகள், 10 விமான பணியாளர்கள் என, மொத்தம் 242 பேருடன் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787 ரக ட்ரீம்லைனர் இரட்டை இன்ஜின் விமானம் நேற்று முன்தினம் (ஜூன் 12) மதியம், 1:38 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதில், மேகினி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி மீது, விமானத்தின் முன் பகுதி மோதியதில், ஒரே ஒரு பயணி தவிர அனைவரும் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில், அஞ்சல் துறை ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி