வேகத்தடை இல்லாத சாலை - ஆப்பூரில் விபத்து அபாயம்

மறைமலை நகர் - ஆப்பூர் சாலை 7 கி. மீ. , தூரம் உடையது. இச்சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையின் இணைப்பு சாலை. இந்த வழியாக, தினமும் 1, 000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பேரமனூர் சிவன் கோவில் சந்திப்பு பகுதியில், திருக்கச்சூர் - மறைமலைநகர் - ஆப்பூர் சாலை சந்திப்பு வளைவு உள்ளது. இங்கு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி