கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் மற்றும் வாயலுார் உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சனை காரணமாக நேற்று மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் ஆயுதப்படை காவலர் ஒருவர் உட்பட மீனவர்களும் காயமடைந்தனர். 2024 முதல் நீடிக்கும் இந்த பிரச்சனையால், இரண்டாம் நாளாக பதற்றம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.