தெருவில் விளையாடும் குழந்தைகள், குறிப்பிட்ட அந்த மின் கம்பம் அருகே சென்று விளையாட்டாக, பியூஸ் கேரியரை தொட நேரிட்டால், மின்சாரம் தாக்கும் சூழல் உள்ளது. அதே போல, அப்பகுதியைச் சேர்ந்த பகுதியினர், கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் உட்பட அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் அனைவரும், மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், ஆபத்தான நிலையில், தொங்கி கொண்டிருக்கும், 'பியூஸ் கேரியர்' இணைப்பை சீரமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரையரங்கு காட்சிகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய்க்கு நடிகர் விஷால் நன்றி