இந்த ஏரிக்கரை சாலையை, தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என, பல்வேறு கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தும், நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் செவிசாய்க்கவில்லை என, குற்றம்சாட்டுகின்றனர். அவ்வப்போது பெய்து வரும் மழையால், ஏரிக்கரை சாலையில் இருக்கும் மரணப்பள்ளங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், புள்ளலுார் - அரங்கநாதபுரம் மண் சாலையில், வாகனங்கள் இயக்க முடியாத சூழல் உருவாகிஉள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரிக்கரை சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.