ஆத்தூர் சுங்கச்சாவடியில் 39 மாடுகள் போலீசார் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டைனர் லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மாடுகள் கடத்தப்படுவதாக கடத்தல் அமைப்பின் மாநில தலைவர் ரகுராம் ஷர்மா அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் இரவு அச்சரப்பாக்கம் போலீசார் ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது கண்டைனர் லாரியில் 33 கறவை பசு மாடுகளும் 6 எருமை மாடுகளும் கண்டைனர் லாரியில் கடத்தி வரப்பட்டதை அச்சரப்பாக்கம் போலீசார். லாரியை சோதனை செய்ததில் மாடுகளுக்கு தண்ணீரோ தீவனமோ இல்லாமலும் காற்றோட்டம் இல்லாத வாகனத்தில் அடைத்து கடத்தப்பட்ட39 மாடுகளை மீட்டனர். 

இந்தக் கடத்தல் சம்பந்தமாக லாரி உரிமையாளர் சம்சுதீன், லாரி ஓட்டுநர் சண்முக சுந்தரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி