இவை சாலையின் குறுக்கே இருபுறமும் திடீரென செல்வதால் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. புதிதாக இந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பகுதியில் குரங்குகள் இருப்பது தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று குரங்குகள் அடிபட்டு வருகின்றன. மேலும், சில வாகன ஓட்டிகள் குரங்குகளுக்கு உணவு பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை தருவதால் குரங்குகள் வாகனங்களின் பின்னே ஓடுகின்றன. அப்போது அவை விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே, குரங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையின் இருபுறமும் அறிவிப்புப் பலகை அமைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயக்குமார் வேண்டுமானால் த.வெ.க.விற்கு வரலாம் - செங்கோட்டையன்