இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன், அவ்வப்போது மதுராந்தகத்திலிருந்து வரும் இரண்டு பெண்களிடம் ஆபாசமாக பேசியும், பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். வழக்கம்போல் இன்றும் பார்த்திபன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் பார்த்திபனை ரயிலில் இருந்து இறக்கி அடித்துள்ளனர். தொடர்ந்து பார்த்திபனை பிடித்து அருகில் இருந்த மதுராந்தகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்திபன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வழக்கை செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்