வயலூர்: ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மஹாகும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வயலூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொண்டை மண்டலம் வயலூர் கிராமத்தில் அருள்மிகு திரௌபதியம்மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் சுவாதி நக்ஷத்திரம் மிதுன லக்னத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை காசி 23ஆம் தேதி காலை முன்னதாக காலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து முதல் இரண்டாம் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்று மங்கல இசையுடன் யாக சாலையில் இருந்து புனித கலசங்கள் புறப்பட்டு மூலவர் மற்றும் விமான கோபுரத்திற்கு மூத்த அர்ச்சகர் சங்கர சிவாச்சாரியார் தலைமையில் புனிதர் நீரூற்றி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வி. டி. இராஜாராம் ரெட்டியார் சமூகத்தினர் கிராம பொதுமக்கள் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி