அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி

காஞ்சிபுரம் ஒன்றியம், ஆற்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, விச்சந்தாங்கலில் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு நேற்று (அக்.,3), பண்ணை சுற்றுலா மேற்கொண்டனர். இங்கு பண்ணை மேலாளர் சவுமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் தனஞ்ஜெயன் ஆகியோர், மாணவ- மாணவியருக்கு செடிகள் வளர்த்தல், பதியன் போடுதல், ஒட்டு கட்டுதல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை செயல்விளக்க முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இத்திட்டத்தில் பிற அரசு பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவ- - மாணவியரும் பங்கேற்கலாம் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி