இதையடுத்து, விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளை பராமரிக்க, பூபாலன் குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கீழ்நீர்க்குன்றம் விவசாய நிலத்திற்கு சென்றார். நேற்று காலை, பூபாலன் பெருநகர் வீட்டிற்கு குடும்பத்தோடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 24 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பூபாலன், பெருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து