வடகிழக்கு பருமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு 150 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி அதன் முழு கொள்ளளவான 25 அடியில் 22.3 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி, ஏரியில் இருந்து வினாடிக்கு 150 கன அடி உபரி நீர் கிளியாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.