காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரஞ்சிக்குமார் என்பவரின் நிலம் பரந்தூர் விமான நிலைய திட்டப் பகுதியில் உள்ளது. நில அளவீடு செய்து தர சர்வேயர் சுந்தரவடிவேல் ரூ.50,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய பணத்தை வாங்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சர்வேயர் சுந்தரவடிவேலை கையும் களவுமாகப் பிடித்தனர்.