செவிலிமேடு பாலாறு பாலத்தில் சேதமான சாலை சீரமைப்பு

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு, புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கும் இடையே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலசாலையில், ஆங்காங்கே தார்கலவை பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டிருந்தது. தெருவிளக்கு வசதி இல்லாத இப்பாலத்தில், இரவு நேரத்தில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினர். இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், செவிலிமேடு பாலாற்று பாலத்தில் சேதமடைந்த சாலையை ரெடிமேட் தார்கலவை வாயிலாக 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைத்தனர்.

தொடர்புடைய செய்தி