பள்ளி திறந்த இன்றைய தினமே மாணவ மாணவியருக்கு பாடப் புத்தகங்களும் சீருடை வழங்கப்பட்டன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைகளுடன் நோட்டு புத்தகங்கள் வழங்கியதை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீருடையுடன் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை லதா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி, முன்னாள் எம்எல்ஏவும் தலைமை பொது குழு உறுப்பினருமான வீ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர். டி அரசு, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம், புத்தகப்பை, சீருடைகளை வழங்கி வாழ்த்துதெரிவித்தனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு