அங்கு நகைகளை ஒரு சிறிய பானையில் வைத்து மூடி கொடுத்துள்ளார். அதை வீட்டின் பூஜை அறையில் மூன்று நாட்கள் வைத்து வழிபாடு செய்த பிறகு, திறந்து நகைகளை எடுத்துக் கொள்ளுமாறு யுவராஜ் கூறியுள்ளார். இதை உண்மையென நம்பி, அந்த பானையை வீட்டின் பூஜை அறையில் வைத்து காயத்ரி வழிபட்டார். மறுநாள் யுவராஜ் மொபைல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த காயத்ரி, பானையை திறந்து பார்த்த போது, அதில் நகை இல்லாமல், கண்ணாடி வளையல்கள் இருந்துள்ளன. அதிர்ச்சியடைந்த அவர், மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், மறுமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்த சில பெண்களை, இதேபோல் யுவராஜ் ஏற்கனவே ஏமாற்றி நகை பறித்தது தெரிந்தது.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ