கார்கில் போர் வெற்றி தினம் மதுராந்தகத்தில் பேரணி.

மதுராந்தகம் ஹிந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கார்கில் போர் வெற்றி தின பேரணி, நேற்று நடந்தது. பேரணியை, மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மருத்துவமனை சாலை, ஜி. எஸ். டி. , சாலை மற்றும் தேரடி தெரு வழியாக, முக்கிய வீதிகளில் பேரணி சென்றனர். தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, கார்கில் போர் வெற்றி சார்ந்த கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி