காஞ்சிபுரம்: மூவருக்கு தலா 6 ஆயுள்.. கோர்ட் அதிரடி

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016இல் வசந்தா (64), மகள் தேன்மொழி (32) இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்ததுடன், சத்யாவின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர். வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்த போதுதான் கொலைச் சம்பவம் தெரியவந்தது. நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்த மூவருக்கும் தலா 6 ஆயுள் தண்டனைகள் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி