நாடு முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 14 அன்று மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.