தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வாயிலாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன. மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் வரை, 23 கி.மீ. தூரம் 2022ம் ஆண்டு பணிகள் துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும். அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ. தூரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 டிசம்பர் மாதம் முடிக்க வேண்டும். அடுத்த கட்டமாக, காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ. தூரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 அக்டோபர் மாதம் முடிக்க வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் கால அவகாசம் நிறைவுடைந்தும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?