திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலையில் பாலகி ருஷ்ணன் என்பவரின் பழக்கடை மற்றும் மூர்த்தி என்பவரின் புதிதாக திறக்க உள்ள இனிப்பு கடை நேற்று (பிப்ரவரி 7) திடீரென தீப்பிடித்து எரிந்தது. இரண்டு கடைகளிலும் பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ மளமளவென பரவி 50 அடி உயரத்திற்கு புகை மூட்டம் காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த திருப்போரூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.