சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே சாலை தடுப்பில் மின் ஒயர் அறுந்து தொங்கிகொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியே சென்ற மாரிமுனை பகுதியை சேர்ந்த திருநங்கை புஷாபா மின் ஒயர் தலையில்பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.