திருக்காலிமேடு அரசு பள்ளிக்கு கட்டடம் கட்டித் தந்த 'யமஹா'

காஞ்சிபுரத்தில் உள்ள திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்காக, 12 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடிக் கட்டடத்தை, 'யமஹா மோட்டார்' நிறுவனம் கட்டி ஒப்படைத்துள்ளது. இந்தக் கட்டடத்தில் வகுப்பறைகளைத் தவிர, சமையலறை, கழிப்பறை, கணினி ஆய்வகம், மின் தேவைக்கு, 10 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மழைநீர் சேகரிப்பு வசதி, தண்ணீர்த் தொட்டி, பள்ளியைச் சுற்றி மதில் சுவர் ஆகியவையும் கட்டித் தரப்பட்டுள்ளன. 

பள்ளி மாணவர்களுக்கு, புத்தகப் பைகள், புத்தகங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், யமஹா நிறுவனம், சமூகப் பங்களிப்புப் பிரிவின் இந்தப் பணிகளைச் செய்து வருகிறது. இதற்காக, தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல், நம்ம ஊர் பள்ளி' திட்டத்துடன் இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. 

சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகிய சமூகப் பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டன. நான்கு ஆண்டுகளில் கட்டப்படும் நான்காவதாக, காஞ்சிபுரம் பள்ளிக்குக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி