ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையில், காட்டுக் கூட்டுரோடு சந்திப்பு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறியதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஆதிலட்சுமி சாலையில் தவறி விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே ஆதிலட்சுமி உயிரிழந்தார்.
அவரது கணவர் துளசி ஜெயராம் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஆதிலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.